தஞ்சையில் முதல்முறையாக நாய்கள் கண்காட்சி நாளை 11-03-2023 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாதாக்கோட்டையில் அமைந்துள்ள கால்நடை பாராமரிப்புத் துறையில் செயல்படும் மிருகவதை சங்க வளாகத்தில் நடைப்பெறுகிறது
நாய் இனங்களை பாதுகாக்கவும், செல்லப்பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகப்படுத்தவும், ஆதரவற்று சுற்றி திரியும் நாய்களை தத்தெடுக்கவும், பிராணிகள் வதை கொடுமையில் சிக்காமல் இருக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது
இந்த கண்காட்சியில் பங்கு பெறும் நாய்களுக்கு மிருகவதை தடுப்பு சங்கத்தின் சார்பில் கட்டணம் இல்லாமல் ரேபீஸ் தடுப்பூசி, சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். இதில் பங்கேற்க 7418364555 என்ற எண்ணிலோ அல்லது www.spcathanjavur.org என்ற இணையதளமுகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த கண்காட்சியை பார்வையிட கட்டணம் கிடையாதுஅனுமதி இலவசம்.