Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சை கல்லணைக்கால்வாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா – பொதுமக்கள் கோரிக்கை.

தஞ்சை கல்லணைக்கால்வாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா – பொதுமக்கள் கோரிக்கை.
Top Banner

தஞ்சை காந்திஜிசாலையில் இருந்து எம். கே. மூப்பனார் சாலை பாலம் வரை உள்ள கல்லணைக்கால்வாயில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி கிடப்பதால் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.
இதனால் கல்லணைக்கால்வாயை ஆகாயத்தாமரை செடிகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன.
மேலும், ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பலர் குப்பைகளை கல்லணைக் கால்வாய்க்குள் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் கல்லணைக்கால்வாய் கரையில் உள்ள ராஜராஜ சோழன் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர்.
இதே நிலை நீடித்தால் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் நடைபாதையை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே, துறைசார்ந்த அதிகாரிகள் கல்லணைக்கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *