நமது தஞ்சாவூரில் (12.02.2023) அன்று பெசன்ட் அரங்கில் தஞ்சாவூர் முகநூல் நண்பர்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில்
தஞ்சை மாவட்ட முகநூல் பயன்பாட்டாளர்கள் கட்சி, ரசிகர்மன்றம் என பாகுபாடு இன்றி 200-க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் …
இவ்விழாவில் தஞ்சையில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள்
மற்றும் தன்னார்வ குழுக்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர் மேலும் நடன கலைநிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது
கூடுதல் சிறப்பாக வந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்தனர் மற்றும் மஞ்சள் பையில் மரக்கன்றுகளை விழா குழு அளித்தது பாராட்டுக்குரியது
இந்த நிகழ்ச்சியை ராஜீவ் மற்றும் மனோஜ் கண்ணன் என்ற இளைஞர்கள் ஒருகிணைத்துள்ளனர்
மூத்த வழக்கறிஞர் திரு அ.நல்லதுறை அவர்கள் தலைமையேற்று விழாவை சிறைப்பித்தார்
.
இந்த நிகழ்ச்சியில் வருங்காலத்தில் நிறைய நண்பர்களை புதிதாக சேர்க்கவும்,சமூக செயல்பாடுகள் குறித்து மற்றும் சமூக வலைத்தளங்கள் பற்றிய விழிப்புணர்வும் கலந்துரையாடல் நடைபெற்றது
மேலும் இந்த குழுவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முன்னெடுப்புகளைப் பற்றி விவாதம் நடைபெற்றது அடுத்த ஆண்டு மிகவும் சிறப்பாக இந்த குழுவை ஒரு அங்கீகரிக்கப்பட்ட குழுவாக பதிவு செய்து விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது …