Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

சீருடைபணியாளர் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

சீருடைபணியாளர் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
Top Banner

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது சீருடைப்பணியாளர் இரண்டாம்நிலை காவலர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு காவல்துறையில் மற்றும் தீயணைப்பாளர் 3359 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது வரம்பு OC-26, BC .BCM, MBC (DNC)-28. SC, SC(A), ST- 31 இருக்க வேண்டும். இத்தேர்விற்கு 18.08.2023 முதல் 17.09.2023 வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு 07.09.2023 முதல் நடைபெற்று வருகிறது. எனவே இப்பயிற்சி வகுப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் பயிற்சி வகுப்பின் பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை 14.09.2023 க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே போட்டித்தேர்வெழுதும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும்

தொடர்புக்கு அலுவலக தொலைப்பேசி எண் 04362-237037/9499055905.

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *