முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண்/பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
கபாடி, கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல், சிலம்பம்,கையுந்து பந்து ,கிரிக்கெட், கால்பந்து மற்றும் டென்னிஸ் ,மேசைப்பந்து ,சிலம்பம்,தடகளம் விளையாட்டுகள் மண்டல அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பிற விளையாட்டுகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.
பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் சார்பாக மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
தனி நபர் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
மாவட்ட அளவிலான போட்டிகள்: தனிநபர், ஒற்றையர், இரட்டையர் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும், குழுப் போட்டிகள் ஒவ்வொருவருக்கும் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும் அளிக்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தஞ்சை மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கை செய்தி Notification இணைக்கப்பட்டுள்ளது
1 Comment