அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளில் இடையூறாக கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளதினால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மற்றும் எரியிழை சரிசெய்யும் பணி மேற்கொள்ளும்போது மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் காலில் சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்தினை தவிர்க்கும்பொருட்டு மின்பாதைகள் மற்றும் மின்கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இறுதி ஊர்வலங்களில் வீசப்படும் மாலைகளின் அதிர்வினால் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு மின்மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் இறுதி ஊர்வலங்களில் மாலைகளை மின்கம்பிகள் மீது வீசாமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.