தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சி வழங்கப்படவுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி
மேம்பாட்டுக் பழங்குடியினர் கழகம் (தாட்கோ) இனத்தை சார்ந்த நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்பொது பி.டி.சி ஏவிஷேன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும், கல்வித்தகுதியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.20,000/- த்தை தாட்கோ வழங்கும்.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் AASSC(AEROSPACE SKILL SECTOR COUNCIL)-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்கள Indigo Airlines, Spice Jet, Go First, Vistra, Air India போன்ற புகழ் வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்திவெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,தஞ்சாவூர்