தஞ்சை மாவட்டத்தில் 25 ஆண்டுகளாக இயங்கி வந்த அசோகன் தங்கமாளிகை நகைக்கடை தங்க நகை சிறுசேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகைகளுக்கு வட்டியில்லா கடன் தருவதாக கூறி பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை திரட்டி விட்டு கொடுக்க வேண்டிய பணத்தை வாடிக்கையாளர்களிடம் கொடுக்காமல் கடையை காலி செய்து வருவதாக பொதுமக்கள் ஏறக்குறைய 2000 பேர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கடை தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு என பல கிளைகள் கொண்டு செயல்படுகிறது நகைச்சீட்டு பணம் கட்டினால் குலுக்கல் முறையில் வீட்டுமனை பட்டா வழங்குவதாக கவர்ச்சிகரமான திட்டம் அறிவித்து வாடிக்கையாளர்களை சேர்த்தது இந்நிலையில் கடையில் உள்ள பொருட்கள் எல்லாம் காலி செய்யப்படுத்தை அறிந்த மக்கள் ஒரத்தநாடு மற்றும் தஞ்சை கடையை முற்றுகையிட்டனர் ஒரத்தநாடு பகுதியில் காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்து வருகிறது மக்கள் காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுத்த தலைமறைவான நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து தங்கள் பணத்தை மீட்டு தருமாறு கண்ணீருடன் கேட்டு கொண்டனர்