தஞ்சாவூா மாவட்டம் தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.01.2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர் திருவையாறு ஓரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்
செய்திவெளியீடு செய்தி -மக்கள் தொடர்பு அலுவலர்,தஞ்சாவூர்