Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

நாளை தஞ்சையில் சில பகுதிகளில் மின்நிறுத்தம் (8/8/2023)

நாளை தஞ்சையில் சில பகுதிகளில் மின்நிறுத்தம் (8/8/2023)
Top Banner

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின்நிலையில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம்பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்கடாசலபதிநகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டி யன்நகர்,டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அதேபோல் தஞ்சை மேலவீதி, தெற்குவீதி, பெரியகோவில், செக்கடிரோடு, மேலஅலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மானம்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர்சதுக்கம், வி.பி.கோவில், சேவியர்நகர், சோழன்நகர், ஜி.ஏ.கெனால்ரோடு, திவான்நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன்நகர், பர்மாபஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தைதெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான்நகர், அரிசிக்காரதெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடி வாசல் கடை தெரு, பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தா பாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ்நிலையம் ரோடு, வ.உ.சி. நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *