மாநில அளவிலான கண்காட்சி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான கோடைகால கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி 2023-24 ஆம் ஆண்டு கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி 15.04.2023 முதல் 30.05.2023 வரை அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம் சென்னையில் நடைபெற உள்ளது.
ஆகையால், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான கோடைகால கண்காட்சியில் கலந்து கொள்ள தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் சுய குறிப்பு (BIO DATA), மகளிர் சுய உதவிக்குழுவின் விவரங்கள், உற்பத்தி செய்யும் பொருட்கள் மாதிரி புகைப்படம் போன்ற ஆவணங்களை https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் 07.04.2023 தேதிக்குள் பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இணையத்தில் பதியாத சுயஉதவிக்குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்படாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயலாக மகளிர் குழுக்கள் தஞ்சாவூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் (அறை எண்.223, இரண்டாம் தளம்)-ல் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ்
ஆலிவர் இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்தார்,
செய்திவெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,தஞ்சாவூர்